கற்பழிப்பு, கொலை புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கொந்தளிக்கும் நடிகர் விவேக்

Actor vivek, sexual harassment
Actor Vivek about sexual harassment

திருமூலர், திருவள்ளூவர், வள்ளலார், விவேகானந்தர் ஆகிய புனிதர்கள் வாழ்ந்த பூமியில் பலாத்கார கொலைகள் நடைபெறுவதாக நடிகர் விவேக் வேதனை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ்வில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. திருப்பூரில் வட இந்திய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவமும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விவேக், பாலியல் வன்கொடுமை பற்றி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அன்பே சிவம்- திருமூலர்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?- திருவள்ளுவர்; ஜீவகாருண்யமே மோட்சத் திறவுகோல்-வள்ளலார் எல்லாவற்றுக்கும் மேல் அன்பு- விவேகானந்தர். இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடைபெறும் நிலையில், 15 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here