நடிகர் விஜய் தனது அப்பாவை எதிர்த்து வழக்கு !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர் விஜய்.சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்தபடியாக ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளவர்.மேலும் விஜயின் ரசிகர்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அணைத்து தரப்பிலும் இருக்கின்றனர்.

தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தேர்தலை சந்திக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகின.நடிகர் விஜய் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.

கடந்த வருடம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சியை அவர் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கினர்.மேலும் பொருளாளராக தாயார் ஷோபா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் இதற்கு விஜய் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது.

அதற்கு பிறகு விஜய்க்கும் அவர் தந்தை உறவுக்குள் பிளவு இருப்பது தெரியவந்தது. தனது பெயரை வைத்து தேவையின்றி அரசியல் கட்சிகள் தொடங்கப்படுவதை விரும்பாமல் விஜய் வழக்கு தொடர்ந்தார்.தற்போது செப்டம்பர் 27ம் தேதி விஜய் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க : விண்வெளி சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த ஸ்பேஸ்எக்ஸ் !