கொரோனா பொதுநிவாரண நிதிக்காக நடிகர் வடிவேலு ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா பொதுநிவாரண நிதிக்காக பல்வேறு நடிகர்,நடிகைகள்,அரசியல் தலைவர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் உதவியை அளித்து வருகின்றனர்.

இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கினார்.