மன அழுத்தத்தைப் போக்கும் பிரபல நடிகர்

கொரோனா சிகிச்சை மையங்களுக்கு சென்று, அங்கு சிசிக்கை பெறுபவர்களின் மன அழுத்தத்தை குறைந்த்து வருகிறார் நடிகர் ரோபோ சங்கர்.

ரோபோ சங்கர் செய்து வரும் விஷயம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக கொரோனா சிகிச்சை மையங்களுக்கு நேரில் சென்று பேசி அவர்களை மகிழ்வித்து வருகிறார்.

இதை கொரோனாவின் முதல் அலையில் இருந்தே செய்து வருகிறார். அதோடு அரசு இல்லங்களில் உள்ள குழந்தைகளிடமும் பேசி அவர்களின் மன அழுத்தம் குறைய வழி செய்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கரின் சேவையை பாராட்டி வருகிறார்கள்.