நடிகர் கமல் ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார்.தற்போது குணமாகி சிகிச்சை முடிந்து வெளியில் வந்துள்ளார்.
இந்நிலையில் கமல் ஹாசன் இன்று பணிக்குத் திரும்புவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன்போல கவனித்து சிகிச்சையளித்த
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி தலைமையிலான மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், என்னிரு மகள்களுக்கும், ஊண் உறக்கம் இன்றி உடனிருந்து கவனித்துக்கொண்ட என் அணியினருக்கும், மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.