கரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் கொடுத்த நடிகர் ஜெயம் ரவி !

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது.நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கரோனா பாதிப்பு மற்றும் இறப்பு சதவீதமும் அதிகரித்து வருகிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின் கரோனா நிவாரண நிதியளிக்க மக்கள் முன்வரவேண்டும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து பல பொதுமக்கள்,பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்களான அஜித்,ரஜினி,சூரிய,கார்த்திக் போன்றவர்கள் நிதிஉதவி வழங்கியுள்ளனர்.தற்போது நடிகர் ஜெயம் ரவி கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.