தெலுங்கு ரசிகர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளார் நடிகர் தனுஷ்..!

நடிகர் தனுஷ் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பல அவமானங்களை சந்தித்தாலும் அதையே தனது வெற்றி படிகட்டுகளாக மாற்றி ஆடுகளம், அசுரன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து தேசிய அளவில் சிறந்த நடிகர் விருது பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கொலவெறி பாடல் மூலம் ஒரே இரவில் உலகம் முழுவதும் பிரபலமானவர் தான் இவர். யூடியூப் – ல் இவரின் ரவுடி பேபி பாடல் இன்றளவும் 1.1 பில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இப்படி அசாத்தியமான சாதனைக்கு சொந்த காரரான தனுஷ் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் கதநாயகனாக நடித்து தமிழில் பிற நடிகர் செய்யாத சாதனைகளையும் செய்து கொண்டு வருகிறார்.


சமீபத்தில் வெளியான வெற்றி திரைப்படம் கர்ணனை தொடர்ந்து இயக்குனர் நரேன் மற்றும் தனுஷின் உடன் பிறந்த அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படமும் தன் கை வசம் கொண்டுள்ளார் இவை மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் தற்போது நரேனின் பெயரிட படாத படத்தின் படபிடிப்பு ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டி யில் வேகமாக நடை பெற்று வருகிறது. அங்கு நடிகர் தனுஷை சந்திக்க பிரபல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படையெடுத்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தேசிய அளவில் சிறந்த இயக்குனராக விருது வாங்கிய தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா வின் கதை தனுஷை மிகவும் கவர்ந்துள்ளது எனவே அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் அவர். இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் நாராயண தாஸ் நரங் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் மும்மொழி படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகர் கார்த்திக் உபிரி எனும் படம் மூலம் நேரடியாக தெலுங்கில் களம் இறங்கினார் இது தோழா எனும் பெயரில் தமிழிலும் வெளியாகி வெற்றி பெற்ற திரை படமாகும். அவரை தொடர்ந்து நடிகர் தனுஷும் நேரடியாக தெலுங்கில் கால் பதிப்பது தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி தெலுங்கு ரசிகர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹாலிவுட் வரை சென்று வென்ற நம் ரவுடி பேபி தெலுங்கில் வெற்றி பெறுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.