கங்கை ஆற்றுக்குள் விழுந்த 9 லாரிகள்

கங்கை நதிக்குள் 9 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன. இந்த விபத்தில் 7-8 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்துவருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து சரக்கு கப்பலில் ஏற்றி கொண்டு செல்லப்பட்ட லாரிகள் மேற்கு வங்க மாநிலம் மால்டா மணிசக் பகுதியில் கங்கை நதிக்குள் விழுந்தன. இந்த விபத்தில் 7-8 பேர் மாயமானார்கள். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதுவரை அவர்கள் குறித்த எந்தத் விபரமும் கிடைக்கவில்லை. இந்த விபத்து திங்கள்கிழமை (நவ.23) மாலை 7 மணிக்கு நடந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் ராஜாஸி மித்ரா அங்கு சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

மாயமானவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.