6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில், ரெளடி எடிசன் என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதான கோபிநாத் (28) என்பவர் கடந்த மாதம் 24ஆம் தேதி சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பிணை கையெழுத்து போட்டுவிட்டு திரும்பும்போது, சூரமங்கலம் காவல்நிலையம் அருகே 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைதான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ்குமார், விக்னேஷ், அருள்மணி, அந்தோணி ஆகிய 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் இன்று (டிச. 30) சேலம் மாநகர காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அதேபோல் தொடர் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்த லால்குடியைச் சேர்ந்த கலைப்புலி ராஜா என்பவரும், இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.