தமிழகத்தில் திறக்கப்படும் திரையரங்குகள் !

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.தற்போது அமலில் உள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ந்தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

மேலும், இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இந்த ஊரடங்கில் பல புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த கொரோனா தொற்று வந்து ஒரு வருடங்களை கடந்தும் தொற்று பாதிப்பு இன்னும் முழுமையாக குறையவில்லை.

மேலும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி 50% பார்வையாளர்களுடம் 23ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும் தற்போது பல படங்கள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.