தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம் !

100 சதவீதம் இலக்கை அடைந்த அந்தமான் மற்றும் நிக்கோபார்

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

 கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தற்போது தமிழ்நாட்டில் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.இன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மெகா முகாம் மூலம் மக்கள் பயன்பெறுமாறு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.கொரோனா தொற்றிலிருந்து விடுபட மிக சிறந்த வழி தடுப்பூசி ஒன்று தான்.மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !