தமிழகத்தில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று !

கொரோனா டெல்டா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த வகை தான் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ். தமிழகத்தில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது,தமிழகத்தில் முதன்முறையாக வைரஸ் பகுப்பாய்வு மையம் தொடங்கவிருக்கிறோம். இந்த வைரஸால் பாதிப்பு அதிகமாகக்கூடாது என்பதற்காக, அதனை கட்டுக்குள் வைத்திருக்க சென்னையில் புதிய பகுப்பாய்வு மையத்தை நிறுவ தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 3 பேருக்கு புதிய உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தொற்று வந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு இந்த தொற்று பரவவில்லை என்று தெரிவித்தார்.