ஏழைகளுக்கு வீட்டு வசதி அமைத்துத்தரப்படும்:பிரதமர் உரை !

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை இன்று கொண்டாடப்படுகிறது.டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றினர்.பின்பு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

நமது நாடு வளர்ச்சிப் பாதையில் மிக வேகமாக செல்கிறது என்று கூறினார்.நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் காப்பீடு உள்ளிட்ட வசதிகள் ஏழைகளுக்கு 100 சதவீதம் கிடைக்க வேண்டும்.

மேலும் இந்தியாவில் கிராமங்களின் நிறைய மாற்றத்தை காணமுடிகிறது என்று மோடி கூறினார், டிஜிட்டல் தொழில்முனைவோர் கிராமங்களிலும் வளர்க்கப்படுகிறார்கள்.

கிராமங்களில் தரமான மருத்துவ வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு 100 சதவீதம் வீட்டு வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 75வது சுதந்திர தின விழாவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.