புதுவை முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி !

கரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை உலுக்கி வருகிறது.தினசரி அதிகம் தொற்று பரவும் மாநிலங்களாக மகாராஷ்டிரா,கர்நாடகா,தமிழகம் இருந்து வருகிறது.

அரசியல் தலைவர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.தற்போது புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று கடந்த 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார்.அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.