பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதம் இறுதியில்..!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர். பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து 9, 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாக படிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. கலை -அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கால்நடை மருத்துவ கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன.

இதனால் பிளஸ்-2 தேர்வினை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது தொற்று பரவல் தீவிரமாகி வருவதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி தேர்வை நடத்தினால் பாதுகாப்பாக இருக்காது என்று தேர்வு துறை கருதுகிறது.

அதனால் பிளஸ்-2 பொதுத் தேர்வினை மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் நடத்தலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது.