தற்கொலையால் மாணவி உயிரிழப்பு !

ஆவடி அடுத்த கொள்ளுமேடு, பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மணி. ஆந்திராவில் விவசாயம் செய்துவரும் இவருக்கு செங்கம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர்களது மகள் மோனிஷா அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தார்.

நேற்று செங்கம்மாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மோனிஷா, தற்கொலையால் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோனிஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.