சின்னம்மா சிறைக்கலாம் சீக்கிரம் முடிகிறது- உறுதிப்படுத்திய கர்நாடகா சிறைத்துறை

சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார். எனவே, இம்மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுவந்தது.

இருப்பினும், சசிகலா விடுதலை செய்யப்படுவது குறித்து சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் இருந்து வந்தது. இந்தநிலையில், ஜனவரி 27 காலை 10 மணி அளவில் விடுதலை செய்யப்படுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கர்நாடக சிறைத்துறை.

மின்னஞ்சல் மூலமாக சசிகலா தரப்பு வழக்கறிஞருக்கு தகவல் வழங்கியுள்ளது கர்நாடக சிறைத்துறை.