காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் வெற்றிக்கு காத்திருக்கும் பாகிஸ்தான் பெண்!!!

காஷ்மீரைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தான் பெண் சோமியா சதாஃப், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் சுயாட்சியாகப் போட்டியிட்டு தேர்தல் வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

சமூக பொருளாதார திட்டங்களில் பங்கேற்றிருந்த சதாஃப், பிரதமர் நரேந்திர மோடியுடனும் கலந்துரையாடியுள்ளார்.

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. உள்ளூர் மக்களின் நல்மதிப்பை பெற்றுள்ள சோமியா சதாஃப், இத்தேர்தலில் வெற்றிப்பெற்று மக்கள் நலப்பணிகளை ஆற்றுவாரா என்ற ஆர்வத்துடன் தேர்தல் முடிவுகளை அவரது ஆதரவாளர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.