அரசை எதிர்த்தால் தேசவிரோதிகள்- ராகுல் காந்தி

விவசாயிகள் போராட்டம் பற்றி கடந்த வாரம் ராகுல் வெளியிட்ட ட்விட்டில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று (பிரதமர்) சொன்னார்கள். ஆனால், விவசாயிகளின் வருமானம் பாதியாகி இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் வருமானம் 4 மடங்காக அதிகரித்துள்ளது. மோடி அரசு பொய்களின் அரசாக உள்ளது. சூட்-பூட் சர்க்காராக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இன்று அவர் வெளியிட்ட பதிவில், மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் தேசவிரோதிகள். கவலைப்படும் பிரமுகர்கள் நகர்ப்புற நக்சல்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா பரப்புபவர்கள், பலாத்கார பாதிப்புக்கு உள்ளோனார் யாருமே கிடையாது, போராடும் விவசாயிகள் காலிஸ்தான் தீவிரவாதிகள், பெரும் முதலாளிகள் சிறந்த நண்பர்கள்… என்று குறிப்பிட்டிருக்கிறார்.