Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (31.01.2023)

சென்னை: சுபகிருது ஆண்டு தை மாதம் 17ம் தேதி (Today Rasi Palan) செவ்வாய்க்கிழமை. சந்திர பகவான் ரிஷப ராசியில் பயணம் மேற்கொள்கிறார். மாலை 3.48 மணி வரை தசமி. பின்பு ஏகாதசி. அதிகாலை 2.28 மணி வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். முக்கிய முடிவுகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்: தேவையான பணம் கிடைக்கும், என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

மிதுனம்: செயல்கள் வெற்றிகரமாக முடியும். தைரியமாகச் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்: செயல்கள் அனுகூலமாகும், என்றாலும் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமை தேவை.

சிம்மம்: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். பிரச்னைகளைத் தவிர்க்க விட்டுக் கொடுத்துப்போவது நல்லது.

கன்னி: மனதில் நம்பிக்கை அதிகரிக்கும் துணிந்து செயல்படுவீர்கள். செயல்களில் வெற்றி கிடைக்கும் குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

துலாம்: பணவரவுக்கு வாய்ப்புண்டு. உறவினர்களால் மறைமுக ஆதாயம் ஏற்படும். கொடுத்துத் திரும்பவராது என்று நினைத்த தொகை வசூலாகும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு.

விருச்சிகம்: முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உறவுகளால் ஆதாயம் உண்டாகும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.

தனுசு: உறவுகளிடம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள், என்றாலும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்: வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற செலவுகள் குறித்துக் கவலைப்படுவீர்கள், இறைவழிபாடு கட்டாயம் தேவை.

கும்பம்: மகிழ்ச்சியாக இருப்பீர்கள், எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும், எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும்.

மீனம்: உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகள் சாதகமாகும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.