Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (27.12.2022)

தருமபுரி: சுபகிருது ஆண்டு (Today Rasi Palan) மார்கழி மாதம் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை 27.12.2022. சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.18 மணி வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று இரவு 08.29 மணி வரை அவிட்டம். பின்பு சதயம். புனர்பூசம், பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: அதிர்ஷ்டமான நாள், புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்: தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால், உணவு விஷயத்தில் அக்கறை அவசியம்.

மிதுனம்: உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தில் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. இறைவழிபாடு தேவை.

கடகம்: முற்பகலில் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பிற்பகலுக்கு மேல் செலவுகள் ஏற்படும். சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்: காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். முக்கிய முடிவுகளில் கவனம் தேவை.

கன்னி: எந்த முடிவையும் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறாமை அவசியம்.

துலாம்: உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றச் செலவு செய்ய நேரிடும். குடும்பத்தினர் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும்.

விருச்சிகம்: அனுகூலமான நாள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உறவுகளால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு.

தனுசு: சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.

மகரம்: எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமை அவசியம். இறைவழிபாடு தேவை.

கும்பம்: மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

மீனம்: வீட்டில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார்.