Premalatha Vijayakanth: தமிழை பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும்: பிரேமலதா விஜயகாந்த்

மதுரை: தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் (Premalatha Vijayakanth) ஒன்றுதான் தமிழைப் பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சிவகாசியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அதன் பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும். ஒரு ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் ஆளுநராக இருப்பதினால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும். ஆளுநரின் இந்த பேச்சுக்கு தேமுதிக தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.