TTV Dinakaran’s answer to OPS: பழைய பகையை கெட்ட கனவாக மறந்துவிடலாம்: ஓபிஎஸ்க்கு டிடிவி தினகரன் பதில்

சென்னை: TTV Dhinakaran replied to OPS that old enmity can be forgotten as a bad dream. பழைய பகையை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடலாம் என ஓபிஎஸ்க்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் எனவும் அவர் தீர்ப்பளித்தார்.

இதனைததொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், ஒன்றிணைந்து செயல்படுவோம் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்திருந்தார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவும் வலுத்து வருகிறது.

கடந்த 18ம் தேதி ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரவாக, தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே. என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரனை அண்ணன் என பாசத்துடன் அழைத்தது குறித்து, பழைய பகை, கசப்பு உணர்வுகளை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த கால கசப்புணர்வா?அல்லது புரட்சித்தலைவரும் நம் அம்மா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா? எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும். மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும்.
இதனை உணர்ந்து செயல்பட்டால் நல்லது என்பதை, அண்ணன் டிடிவி என்று பழைய பாசத்தோடு சொல்லும் தம்பிக்கு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.