Traffic violations in Chennai: சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடம் ரூ. 2.61 கோடி அபராதம் வசூல்

சென்னை: 2,561 drunk drivers in Chennai were fined Rs. 2.61 crore fines have been collected by the traffic police. சென்னைப் பெருநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2,561 பேரிடம் ரூ. 2.61 கோடி போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்துள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறையில் விபத்தை குறைக்கும் வண்ணம் போலீசார் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மேற்பார்வையில் தற்போது அதிரடி வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ப்ரீத் அனலைசர் கருவி மூலம் பரிசோதனை செய்து போக்குவரத்து போலீசார் சென்னை நகரம் முழுவதும் மாலை, இரவு நேரங்களில் தீவிர தணிக்கை செய்து அபராதம் விதிக்கின்றனர். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதத் தொகை ரூ.10,000 அதிகமாக இருப்பதால் பலர் அபராதம் செலுத்தாமல் தப்பி விடுகின்றனர். மேலும் நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் வாகன ஓட்டிகள் அபாரதம் செலுத்துவதில் அலட்சியம் செய்கின்றனர். இதனால் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்ட 7,902 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

எனவே இதுபோன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 5 ந் தேதி முதல் 11ம் தேதி வரை அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ரூ. 2.61 கோடிஅபராதம் வசூல்: இதன் விளைவாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 620 பேர் ஆஜராகி நிலுவை வழக்குகளில் அபராத தொகையை இணையதளம் மூலம் செலுத்தியுள்ளனர்.

மேலும் பலர் அழைப்பு மையங்களுக்கு வெளியில் பணம் செலுத்தியதால், அவர்கள் வேறுவிதமாக அபராதம் செலுத்தியிருந்தாலும், அழைப்பு மையங்களின் உதவியுடன் முடிந்த வழக்குகளின் விவரங்களையும் அபராதத் தொகையையும், இந்த அழைப்பு மையங்களில் இருந்து சேகரித்தனர். இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 10 அழைப்பு மையங்களில் 893 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ. 92,23,000 வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் அழைப்பு மையங்களின் இதே போன்ற நடவடிக்கைகளால் 1,628 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ. 1 கோடியே 68 லட்சத்து 98 ஆயிரத்து 500- அபராதம் தொகை செலுத்தப்பட்டன.

இவ்வாறு கடந்த மூன்று வாரங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 2,521 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ. 2 கோடியே 61 லட்சத்து 21 ஆயிரத்து 500- அபராமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள குடிபோதை வழக்குகளை தீர்வு காண்பதற்காக போக்குவரத்து விதிகளுக்கு எதிராக செயல்படுபவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை நகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துகள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. ஏற்கனவே இதுபோன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 340 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.