Power Outage in Erode: ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்நிறுத்தம் அறிவிப்பு

ஈரோடு: Tomorrow there will be power cut in Karatupalayam sub-station areas near Gopichettipalayam. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.15) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது.

மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் கரட்டுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை)

மின்தடை செய்யப்படும் பகுதிகள் :- குள்ளம்பாளையம், உடையாம்பாளையம், நாதிபாளையம், கங்கம்பாளையம், நஞ்சப்பாநகர், ஆசிரியர் நகர், எஸ்.பி.நகர், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, முத்துகாளிமடை, தொட்டிபாளையம், எலத்தூர், வெட்டயம்பாளையம், குருமந்தூர், இண்டியம்பாளையம், ஊஞ்சப்பாளையம், அக்கரை கொடிவேரி, அரசூர், கோரமடை, உடையாக்கவுண்டன்பாளையம், காசிபாளையம், ஆயிபாளையம், காரப்பாடி, காசியூர், செட்டிபாளையம், ஆண்டிபாளையம், சிங்கிரிபாளையம், கோட்டுப்புள்ளாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.