Torch carrying protest: திருச்செங்கோட்டில் மின் வெட்டைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

நாமக்கல்: Torch-carrying protest against power cut in Tiruchengode. திருச்செங்கோடு அருகே மின்வெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பொதுமக்களும் தீப்ப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிப்பாளையம், கொண்ணையார், ஆயித்தாகுட்டை, கரியாம்பாளையம், சத்யா நகர், யூனியன் ஆபீஸ், ஓலப்பாளையம், செட்டிகுட்டைமேடு, எலிமேடு, பழையகரியாம்பாளையம். உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி அளவில் மின்சாரம் தடைப்பட்டது. இரவு 10 மணி வரை மின்சாரம் கிடைக்காததால் இரவு நேரத்தில் கொசுக்கடியால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் கைக்குழந்தைகள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமையில் எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சு. சுரேஷ் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் தங்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சார துறையைக் கண்டித்தும், உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.