Today’s power outage areas in Trichy: திருச்சியில் இன்றைய மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

திருச்சி: Announcement of today’s power outage areas in Trichy. திருச்சியில் இன்று சனிக்கிழமை 6 மணி நேர மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துறையூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, உப்பிலியபுரம் பகுதியில் உள்ள கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி மற்றும் தங்கநகர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி மற்றும் தங்கநகர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், வெங்கடாசலபுரம், கிருஷ்ணாபுரம், மாராடி, பி.மேட்டூர், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், சோபனபுரம், பச்சமலை, டி.முருங்கப்பட்டி, வலையப்பட்டி, டி.மங்கப்பட்டி, கோட்டப்பாளையம், தளுகை, டி.பாதர்பேட்டை, விஸ்வாம்பாள்சமுத்திரம் தெற்கு, வடக்கு, ஏரிக்காடு, கல்லாத்துக் கோம்பை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதேபோல், ஆர்.கோம்பை, புதுப்பட்டி, ராஜபாளையம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், ஓசரப்பள்ளி, ஈச்சம்பட்டி, கீழப்பட்டி, சிறுநாவலூர், ரெட்டியார்பட்டி, நாகநல்லூர், முத்தையம்பாளையம், பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (17ம் தேதி, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக துறையூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.