TN Results: 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

tn-results
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

TN Results: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 17 லட்சத்துக்கு 92 ஆயிரத்து 450 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இவர்களில் சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளே தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.அந்த வகையில் அவர்களின் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கடந்த 1-ந்தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் நடந்தது. அதன்படி, கடந்த 9-ந்தேதியுடன் அந்த பணிகளும் முடிந்தது . இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20) வெளியிடப்பட உள்ளன.

அதன்படி பிளஸ் 2- தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்புதேர்வு முடிவுகள் மதியம் 12 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

இதையும் படிங்க: அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்