security at Chennai airport: சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

சென்னை: Tight security at Chennai airport: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் வியாபார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இங்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மெயின் கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

வெடிகுண்டு நிபுணா்களும் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதித்து வருகின்றனா். மேலும் விமான நிலைய வளகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலைய காா் பாா்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் காா்களை வெடிகுண்டு நிபுணா்கள் திவீரமாக சோதனை செய்து வருகின்றனா். விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை பொருத்தி விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனா்.

சென்னை விமான நிலையம் முழுவதுதையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும். தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13,14,15 ஆகிய 3 நாட்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.