Several wells : அங்கு நீங்கள் காணும் இடமெல்லாம் கிணறுகள் மட்டுமே உள்ளன‌

Udupi : உடுப்பி மாவட்டம் பர்கலா நகரில் சுமார் 20 ஏக்கர் தனியார் நிலத்தில் இந்த விசித்திரமான கிணறுகள் உள்ளன.

உடுப்பி :Several wells : இவ்வளவு மர்மமான இடம் இது. இந்த பாழடைந்துள்ள நிலத்தில் எங்கு பார்த்தாலும் கிணறுகள் மட்டுமே உள்ளன‌. இந்த விசித்திரமான கிணறுகள் உடுப்பி மாவட்டம் பர்கலா நகரில் சுமார் 20 ஏக்கர் தனியார் நிலத்தில் அமைந்துள்ளது. இது ‘நூறு கிணறுகளின் பாடல்’ என்று அழைக்கப்படுகிறது; ஆனால் இந்தக் கிணறுகளின் பின்னணி வரலாற்று முக்கியத்துவம் யாருக்கும் தெரியாது.

ஆங்காங்கே பல்வேறு வகையைச் சேர்ந்த‌ மரங்கள், முட்புதர்களைத் (Trees, shrubs) தவிர, இங்கு வேறு ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தப் பகுதியில் கண்ணை மூடிக்கொண்டு நடந்தீர்கள் என்றால், நடக்கும் இடமெல்லாம் கிணறுகள் மட்டுமே காண முடியும். டஜன் கணக்கான கிணறுகள் அடி மரங்களுக்கு இடையில் புதைந்துள்ளன. புல்வெளிகளில் மறைந்திருக்கும் இந்த கிணறுகள் வியக்க வைக்கின்றன, ஒவ்வொரு கிணற்றிலும் தண்ணீர் உள்ளது.

பசுமையான பகுதியாக, அழகான இடமாக அது உள்ளது. ஆனால் அவற்றைக் தோண்டியவர்கள் யார்? இத்தனை கிணறுகள் உருவாக்கியதற்கான‌ நோக்கம் என்ன (What is the purpose of creating so many wells?) வென்று யாருக்கும் தெரியவில்லை. கிராம மக்களின் பேச்சு வழக்கில் இந்த பகுதி நூறு கிணறுகளின் பாடல் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நூறு கிணறுகள் இருப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர். ஆனால், சுற்றிலும் புதர்களை எல்லாம் அகற்றிவிட்டு, நுணுக்கமாகப் பார்த்தால் முப்பது கிணறுகளை மட்டுமே காண‌ முடிகிறது.

இது ஒரு தனியாருக்கு சொந்தமான‌ இடம். இந்த பகுதி உள்ளூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது (It is located in the area adjacent to Mahalingeswarar Temple). இந்த கிணறுகள் ஒரு காலத்தில் ஜெயின் சமூகத்துடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இப்பகுதியில் முன்னோரிகளின் நாகரீகத்தின் அடையாளங்களாக இருக்கலாம். கிணற்றுக்கு அடுத்ததாக கட்டிடங்கள் இருந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை. இங்கு யாரேனும் குடியிருந்திருப்பார்களா? என்று ஆச்சரியமாக உள்ள‌து. தற்போது இந்த நிலம் கவுடா சரஸ்வத் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்துக்குச் சொந்தமானதாக உள்ளது. இந்த மர்மக் கிணறுகளின் வரலாறும் அவர்களுக்குத் தெரிவில்லை. இங்கு 99 கிணறுகள் உள்ளன. ஆனால் கண்ணுக்குத் தெரியாத நூறாவது கிணற்றில் பெரும் செல்வம் ஒளிந்துள்ளது என்ற கதையும் கூறப்படுகிறது. இந்த கிணறுகள் குறித்து எவ்வளவு ஆராய்ந்தாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தக் கிணறுகளின் மர்மம் பற்றி தகவல் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

தனியார் இடம் என்பதால் வாகனம் ஓட்டுபவர்கள் குறைவு. அதனால் ஒவ்வொரு கிணற்றையும் சுற்றி மரங்கள் வளர்ந்துள்ளன. இருப்பினும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு தண்ணீர் வழங்கும் புகலிடமாக இந்த பகுதியின் உள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் இத்தனை கிணறுகளை பற்றி வரலாறு வெளி உலகிற்கு தெரியாமல் மர்மமாகவே உள்ளது. இதனை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (Archaeologists) ஆராய்ந்து உலகிற்கு இந்த கிணறுகளின் வரலாற்றைக் கூற முன் வர வேண்டும்