Tamil News: கரூர் மாவட்டம் தென்நிலை மேல்பாகம் புளியம்பட்டியில் அமைந்துள்ள விநாயகர் பகவதி அம்மன் இடைச்சியம்மன் பொட்டுசாமி ஆகிய ஊர் பொது கோவில்களை கடந்த ஆண்டு பலையகோவிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் செய்தனர் இதற்கு ஒரு ஆண்டு முடிந்த நிலையில் கிராமத்தினர் ஒன்று சேர்ந்து நூத்தி எட்டு சங்கு யாக பூஜை நடத்தி வழிபடுவதற்கு முன்வந்தனர்
இந்த நிலையில் நேற்று இரவு யாகசாலை அமைத்து 108 சங்கில் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை ஊற்றி யாகம் நடத்தி அனைத்து கோவில்களிலும் விசேஷ அபிஷேகம் நடத்தி அலங்காரங்கள் செய்து பூஜை செய்தனர் இந்த பூஜைகள் பெரிய வீட்டுக்காரர் சண்முகம் குடும்பத்தார் தலைமையில் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தலைமையில் நடந்தது

டி என் கே கட்சி நிறுவனர் அதே ஊரை சேர்நத வாழவந்தி சரவணன் பூஜையில் கலந்து கொண்டார் அவருக்கு பொன்னாடை போற்றி கிராமத்தினர் சிறப்பித்தனர்

பின்னர் வாழவந்தி சரவணன் தலைமையிலேயே பழங்காலத்தைய பண்பாட்டு கலை நிகழ்ச்சி வள்ளி கும்மி ஆட்டம் சுமார் 3 மணி நேரம் வரை நடந்தது அதை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர் இந்த ஓராண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சி ஊரெங்கும் விழா கோலமாக மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு அனைவரும் வியக்கும் படி கொண்டாடினார்கள்




