Sudden malfunction in the flight: சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: A sudden malfunction in the flight that took off from Chennai. சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து 146 பயணிகளுடன் இன்று காலை தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இந்த விமானத்தில் 7 விமான ஊழியர்கள் உட்பட 146 பேர் செய்த நிலையில், ஓடுபாதையில் விமானம் சென்ற போது திடீர் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக விமானிகள் இயந்திர கோளாறு தொடர்பாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித நடவடிக்கையால் 146 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். பயணிகள் தற்போது ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்ட உடன் விமானம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.