தருமபுரி: தருமபுரி இலக்கியம்பட்டியில் வேளாண்மை மற்றும் (Small Grains International Annual Festival) உழவர் நலத்துறை சார்பாக சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவை முன்னிட்டு சிறுதானிய விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிறுதானிய வகைகளில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் ஆயில் வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
இதில் பாலவாடி உழவர் உற்பத்தியாளர், சுப்பிரமணிய சிவா கூட்டு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பாக சார்பில் வி.ரவி மற்றும் ராமு, தனசேகரன், வ.தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறுதானியங்கள் மற்றும் ஆயில் விற்பனைக்காக வைத்தனர். அதே போன்று மூக்கனஅள்ளியில் இருந்தும் சிறுதானியத்தில் தயாரிக்கப்படும் உணவு வகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.