Admk team meets with annamalai: ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கக்கோரி பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் (Admk team meets with annamalai) ஆதரவு அளிக்கக்கோரி பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அத்தொகுதிக்கு 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டியது கட்டாயமாகும். இதற்கிடையில் அத்தொகுதியில் இடைத்தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. நேரடியாக போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளிடையே ஆதரவு திரட்டும் வேளையில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது. அதே போன்று இன்று சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்த சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.