communal conflict : வகுப்புவாத மோதலில் ஷிவமொக்கா முதலிடத்திலும், ரவுடித்தனத்தில் உடுப்பி மாவட்டம் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளன‌

Shivamogga: நாட்டில் மதக்கலவரம் காரணமாக பல மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கர்நாடகம் என்றாலே, வகுப்புவாத கலவரம் என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது மங்களூரு தான்.

communal conflict : நாட்டில் வகுப்புவாத கலவரங்களால் ஏராளமான மோதல்கள் நடக்கின்றன. குறிப்பாக கர்நாடகம் என்றாலே வகுப்புவாத கலவரம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மங்களூரு தான். மதத்தின் காரணமாக தென் கன்னடம் மாவட்டத்தில் மூன்று தொடர் கொலைகள் நடந்துள்ளன. தென் கன்னடம் மாவட்டம் சுல்யா தாலுகாவில் மசூத் மற்றும் பிரவீன் நெட்டாரு கொலை வழக்கும், சூரத்கலில் ஃபாசில் கொலையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு முன், ஷிவமொக்காவில் ஹர்ஷா கொலை வழக்கும் பெரிய அளவில் செய்திகளாக வெளி வந்தன.

மாநிலத்தில் மதத்தின் காரணமாக (Because of religion) இதுபோன்ற கொலைகள் நடப்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது. ஷிவமொக்காவிலும் சுதந்திர பவள விழா தினத்தன்று வீர் சாவர்க்கரின் புகைப்படம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருவரை கொல்ல முயற்சி நடந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் கருத்தில் கொண்டால், தென் கன்னடம் மற்றும் ஷிவமொக்கா மாவட்டங்கள் மாநிலத்தில் வகுப்புவாத மோதல் வழக்குகளில் முன்னணியில் உள்ளன என்று தெரிய வந்துள்ளது.

வகுப்புக் கலவரங்களில் தென் கன்னடம், ஷிவமொக்கா (Shivamogga, South Kannada) மாவட்டங்கள் முதலிடத்திலும், ரவுடிகள் வழக்கில் உடுப்பி, கோலார் மாவட்டங்கள் முன்னணியிலும் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மதக் கலவரம் காரணமாக மாநிலத்தில் இதுவரை 242 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. முதல் இடத்தில் உள்ள ஷிவமொக்காவில் இதுவரை 57 வழக்குகளும், தென் கன்னடம் மாவட்டத்தில் 46 வகுப்புவாத மோதல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்த இடங்களில் பாகல்கோட், தாவணகெரே மற்றும் ஹாவேரி மாவட்டங்கள் உள்ளன, இந்த மாவட்டங்களில் முறையே 26, 18 மற்றும் 18 வகுப்புவாத மோதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மண்டியா,வட‌ கன்னடம், ராமநகரம், கலபுர்கி, கொப்பள் ஆகிய மாவட்டங்களில் வகுப்பு வாத மோதல்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை (No communal clashes were recorded) என்பது நிம்மதியளிக்கிறது.

ரவுடித்தனம் தொடர்பான வழக்குகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 431 வழக்குகள் பதிவாகி (total of 431 cases have been reported in the last 5 years), இந்தப் பட்டியலில் உடுப்பி மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கோலாரில் 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பட்டியலில், ஷிவமொக்கா மற்றும் தென் கன்னடம் மாவட்டம் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன மற்றும் முறையே 156 மற்றும் 152 ரவுடித்தன வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இது தவிர, கலபுர்கியில் 97 வழக்குகளும், பெங்களூரில் 60 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

கடந்த மூன்றாண்டுகளின் புள்ளி விவரத்தைப் பார்த்தால் மாநிலத்தில் நான்கு கொலைகள் மதக்கலவரம் காரணமாக நடந்துள்ளன. இதில், தென் கன்னடம் மாவட்டத்தில் 1, மங்களூரு நகரில் 1, கத‌க்கில் 1, ஷிவமொக்காவில் 1 கொலை வழக்குகள் நடந்துள்ளன. இதுமட்டுமின்றி வகுப்புவாத மோதலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட‌ 380 போலீசார் காயமடைந்தனர் (380 policemen were injured).