Seizure of 2022 Grams gold: சென்னை விமான நிலையத்தில் ரூ.89.97 மதிப்பிலான 2,022 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை: Seizure of 2022 Grams gold of 24K purity worth 89.97 lakhs by Chennai Air Customs. சென்னை விமான நிலையத்தில் ரூ.89.97 மதிப்பிலான 2,022 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் எம்.மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள அறிக்கையில், அபுதாபியில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் 3எல்-141 என்ற விமானத்தின் மூலம் 11.11.2022 அன்று சென்னை வந்த இந்தியாவைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரிடம் ரகசிய தகவலின் அடிப்படையின் விமான நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் சோதனை மேற்கொண்ட போது, பசை வடிவில் 3 தங்க பொட்டலங்கள் அவரது உடலின் குடல் பகுதியில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 724 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில் அபுதாபியில் இருந்து எத்திஹாட் ஏர்லைன்ஸ் இஒய்-268 விமானத்தில் இருந்து 12.11.2022 அன்று சென்னை வந்த இந்திய ஆண் பயணி ஒருவரிடம் விமான நிலைய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவரது உடமைகளிலிருந்து 1298 கிராம் எடை கொண்ட 4 தங்க பட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த பயணிகளிடமிருந்து மொத்தம் 2022 கிராம் எடை கொண்ட 89 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சுங்கச்சட்டம் 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.