உடுப்பி: 6 year old School Student :குழந்தைகளை சமாதானப்படுத்த பெற்றோர்கள் சாக்லேட் கொடுப்பது வழக்கம். ஆனால் இனிமேல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூரில் பள்ளி மாணவி ஒருவர் தனது குடும்பத்தினர் கொடுத்த சாக்லேட்டை விழுங்கி பள்ளிக்கு செல்லும் போது சாக்லேட்டை விழுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பைந்தூர் தாலுக்காவின் பிஜூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரீதா பூஜாரி என்பவரின் மகள் சமன்வி (6 வயது) என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சமன்வி உப்புண்தாவில் உள்ள விவேகானந்தா ஆங்கில வழிப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம் போல் காலையில் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் (to school) போது பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று சிறுமி கூறியுள்ளார்.
ஆனால் குடும்பத்தினர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். பள்ளிப் பேருந்து வந்துகொண்டிருந்ததால் கையில் பிளாஸ்டிக்குடன் இருந்த சிறுமி, சாக்லேட்டை வாயில் திணித்துக்கொண்டு பேருந்தை நோக்கி ஓடியுள்ளார். பள்ளி வாகனம் அருகே சிறுமி சென்ற போது மூச்சுத் திணறி உயிரிழந்தார். உடனடியாக, பள்ளி வாகனத்தின் பேருந்து ஓட்டுநர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமிக்கு செயற்கை சுவாசத்தை வழங்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் சிறுமியை பைந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு (Private hospital) கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் இறப்புக்கு சாக்லேட் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மறுபுறம், மாரடைப்பு எனப் பேசப்படுகிறது. குழந்தை இறந்ததற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து பைந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.