Hosur Protest: ஒசூர் போராட்டத்தில் வன்முறை.. பதற்றம்.. தடியடி

ஒசூர்: Protest against for not granting permission for ‘Yeruthu Visu’. எருது பந்தய அனுமதி கோரி ஒசூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோபசந்திரம் என்னுமிடத்தில் இன்று எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்து வரப்பட்டன.

இதனையடுத்து முறையாக அனுமதி வழங்கப்படவில்லை என எருதுவிடும் விழாவிற்கு போலீசார் தெரிவித்தனர். இதனால் இளைஞர்கள் மற்றும் போலிசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் அனைவரையும் விரட்டியடித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், எருது விடும் விழாவிற்கு அனுமதிக்க வேண்டும் என கற்களை குவித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டதையடுத்து, தற்போது எருது விடும் விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது எருது விடும் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு வருவதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து வருகின்றனர்.

ஆனால் கோபசந்திரம் பகுதியில் போராட்டகாரர்கள் விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணகிரி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகங்கள் அணிவகுத்து நின்றன. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு, கோபசந்திரம் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. பிறகு ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். காவல்துறையினரின் இந்த 2 மணி நேர முயற்சிக்கு பிறகு போக்குவரத்துக்கு சரிசெய்யப்பட்டு அனைவரும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது நீண்ட போராட்டத்திற்கு பிறகு அனுமதி பெற்று நடத்தப்படும் எருது விடும் விழாவில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதில் எருது விடும் விழாவை காணவந்தவர்கள் மீது மாடு முட்டியதில் ஒருவரின் கை முறிவு ஏற்ப்பட்டுள்ளது.

தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் 20-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெங்களூரு நெடுஞ்சாலையில் எருது பந்தயத்துக்கு அனுமதி கோரி நடந்த மாபெரும் போராட்டம் வன்முறையாக மாறியது. காவல்துறை மற்றும் அரசு வாகனங்கள் மீது கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஓசூரில் நெடுஞ்சாலையில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கியதில் ஒரு பெண் உள்பட 16 போலீசார் காயமடைந்தனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன், 5 கிலோமீட்டருக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் கே அண்ணாமலை, நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு மாநிலத்தின் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசாங்கத்தை குற்றம் சாட்டி வீடியோக்களை ட்வீட் செய்துள்ளார். தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாக தடை செய்வதே திமுகவின் நோக்கம் என அண்ணாமலை கூறினார்.