Private bus, car collide accident : தனியார் பேருந்து, கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சிவமொக்கா: Private bus, car collide accident: 5 killed : ஷிமொக்கா மாவட்டம் சாகர் வட்டம் அல்லள்ளியில் காரும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 3 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் தாவணகெரே மாவட்டம் (Davanagere District) சென்னகிரியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தின்கார் முற்றிலும் நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்த 23 வயது ஷபாஸ், காரில் இருந்த 14 வயது ரிஹான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.23 வயது தபாப்சும், 27 வயது ஷிஃபா, 45 வயது கமருன்னிசா, 55 வயது ஜப்ருன், 25 வயது முஹம்மது உஸ்மான் மற்றும் காயமடைந்தவர்கள் சாகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஷிமோகா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தையடுத்து தனியார் பேருந்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். விபத்து குறித்து சாகர் ஊரக காவல் நிலையத்தில் (Sagar Rural Police Station) வழக்குப் பதிவு செய்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தீக்குளித்து தற்கொலை (Student committed suicide by setting herself on fire)

கோட்டா: உடுப்பி மாவட்டம் குந்தாப்பூர் வட்டம் கோரவாடியில் எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பிரம்மவார் வட்டத்தில் உள்ள கோட்டா அருகே உள்ள மானூர் படுகெரே அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் அனன்யா தற்கொலை செய்து கொண்டார். இவர் திங்கள்கிழமை தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவட் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து குந்தாப்பூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு (Case registered at Gundapur Police Station)செய்த போலீசார். இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.