Power Outage in Coimbatore: கோவையில் வரும் 13ம் தேதி மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

கோவை: Power Board has announced that there will be power cut on 13th in Kinathukkadu substation areas. கிணத்துக்கடவு துணை மின்நிலைய பகுதிகளில் வரும் 13ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்தியில், கோவை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் திங்கட் கிழமை (13-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கட் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

மின் தடை பகுதிகள்:

கிணத்துக்கடவு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட லட்சுமி நகர், இம்மிடிபாளையம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஒருபகுதி, மில் கோவில்பாளையம் ஒருபகுதி, சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், ஆதியூர், ஜமீன் காளியாபுரம், களத்துார், கானல்புதுார் மற்றும் பெரும்பதி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.