Power Outage in Chennai: சென்னையின் சில பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு

சென்னை: Parts of Chennai will face a power cut from 9 am to 2 pm for maintenance work today. சென்னையில் இந்த பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் இடங்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டாங்கேட்கோ) அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டாங்கேட்கோ) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னையின் பூந்தமல்லி, பெரம்பூர் பகுதிகளில் பராமரிப்புப் பணியின் காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டாங்கேட்கோ) அறிவித்துள்ளது.

சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூந்தமல்லி: திருமழிசை பீடர்

பெரம்பூர்: தொண்டியார்பேட்டை ஹைரோடு, டீச்சர்ஸ் காலனி 2 முதல் 6வது தெரு, கிருஷ்ணன் தெரு.

ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும், இந்த பகுதிகளில் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.