Power Cut in Chennai: சென்னையில் நாளை மின்நிறுத்தம் பகுதிகள் அறிவிப்பு

சென்னை: Announcement of power outage areas in Chennai tomorrow. சென்னையில் நாளை (28ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அவிப்ப்பில், சென்னையில் பல்வேறு இடங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னையின் சில இடங்களில் நாளை (அக்.28-ம் தேதி) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி தாம்பரம் பகுதியில், ஜல்லடையன்பேட்டை, பெரும்பாக்கம், கைலாஷ் நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் மெயின் ரோடு, பள்ளிக்கரணை, தர்மலிங்க நகர், விவேகானந்தா நகர், மீனட்சி நகர், அம்பேத்கர் தெரு, கிருஷ்ணா நகர், ஆஞ்சநேயர் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும் அரும்பாக்கம் பகுதிகளான மேத்தா நகர், ஸ்கைவாக், அய்யாவு காலனி, விஜிஏ நகர், எம்.எம்.டி.ஏ காலனி ‘எ’ முதல் ‘ஆர்’ பிளாக் வரை, அசோக் நகர், வீரபாண்டிய நகர் சூளைமேடு சக்தி நகர் 1 முதல் 5-வது தெரு, மாணிக்கம் ரோடு, அப்துல்லா தெரு, கோடம்பாக்கம் பஜனை கோயில் 3 மற்றும் 4-வது தெரு, அழகிரி நகர் தமிழா வீதி, கங்கை அம்மன் கோயில் தெரு, லட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இதற்கு தகுந்தவாறு தங்கள் அத்தியாவசிய பணிகளை திட்டமிட்டுக்கொள்ளும்படி தமிழக மின் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.