Pongal Gift: வெளியூர் சென்றவர்களும் பொங்கல் பரிசு பெறலாம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு (Pongal Gift) அரசு சார்பில் ரூ.1000 ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இவை 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி முதல் வழங்கப்பட்டன. 92 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.

பொங்கல் தொகுப்புகள் 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டிருந்தன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வருவதால் இன்றும் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொங்கல் தொகுப்பு பெரும்பாலான மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது தொடர்பாக அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து வினியோகித்து கொண்டு இருக்கிறோம் என்றார்.