Governor Celebrate Pongal Festivel: புதுவை ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் (Governor Celebrate Pongal Festivel) இன்று பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணியளவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார். அதனை தொடர்ந்து ஆளுநர் உறியடித்தார்.

மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால், குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டுகளித்து கலைஞர்களை பாராட்டினார்.

விளையாட்டுகளை தொடர்ந்து பொங்கல் விநாயகருக்கு படைக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், தலைமை செயலர் ராஜீவ்வர்மா, டி.ஜி.பி. மனோஜ்குமார்லால் மற்றும் அரசு துறை செயலர்கள், உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.