BBMP’s work in rain damage : மாநில தலைநகரில் கன மழை: பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு பதில் இல்லை

People's dissatisfaction : பொம்மனஹள்ளி, மகாதேவபுரத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

பெங்களூரு: BBMP’s work in rain damage : மாநில தலைநகர் பெங்களூரு தற்போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் பொம்மனஹள்ளி, மகாதேவபுரா பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய வீடுகள் முதல் பெரிய மாளிகை வரை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆனால் இத்தனை பிரச்சனைகள் இருந்தும் பெங்களூரு மாநகராட்சி கண்மூடி செயல்படாமல் உள்ளதாக பெங்களூரு மாநகர‌ மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பெங்களூரில் மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் கீழ் 64 கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தும் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் எந்த பதிலும் சொல்வதில்லை என பொம்மனஹள்ளி, மகாதேவபுரா பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் (People of Pommanahalli, Mahadevapura area are blaming)

பொம்மனஹள்ளி மற்றும் மகாதேவபுராவில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளது (Control rooms have been started in Assistant Engineer offices). மழை வெள்ளச் சேதத்திற்கு நீங்கள் இழப்பீடு கேட்டால், உங்களுக்கு எந்த பதிலும் இங்கு கிடைக்காது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், பெங்களூரு மாநகர‌ கட்டுப்பாட்டு அறையில் இருந்து சரியான நேரத்தில் பதில் கிடைப்பதில்லை. தீயணைப்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் எங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றனர். ஆனால், புகார்களை பெறுவதில் தாமதம் ஏற்படுவது மட்டுமின்றி, ஆமை வேகத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்தார்.

மற்றொரு உள்ளூர்வாசியும் இதே பிரச்சினை குறித்து பேசுகையில், பெல்லந்தூர் ஏரி அருகே 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும் கிடைக்கவில்லை. குடிக்க தண்ணீரும் கிடைக்கவில்லை (The affected people also did not get food. Drinking water is not available). மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தும் யாரும் உரிய முறையில் பதிலளிக்கவில்லை என புகார் தெரிவித்தார்.

ஆனால் உள்ளூர்வாசிகளின் இந்த குற்றச்சாட்டுகளை பெங்களூரு மாநகராட்சி மறுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பெங்களூரு மாநகராட்சி உணவு ஏற்பாடு செய்துள்ளது. வார்டு நோடல் அலுவலர் குழு மற்றும் மார்ஷல்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்திரா உணவகம், இஸ்கான், ஆதம்யா சேதனா (Indira canteen, ISKCON, Adam Chetana) உள்ளிட்ட அமைப்புகள் எங்களுடன் கை கோர்த்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கான குறித்த நேரத்தில் உணவு வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அஅனைத்து விதமான உதவிகளையும் மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர். என்று வருவாய்த்துறை இணை ஆணையர் வெங்கடாசலபதி கூறினார்.