Mysterious person jumped over the wall at Kanimozhi’s house: கனிமொழி வீட்டில் சுவர் ஏறி குதித்த மர்ம நபர்.. மடக்கி பிடித்த போலீசார்

தூத்துக்குடி: A mysterious person jumped over the wall at Kanimozhi’s houseதூத்துக்குடியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வீட்டில் சுவர் ஏறி குதித்த மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி தொகுதி எம்.பி.,யான கனிமொழிக்கு தூத்துக்குடி குறிஞ்சி நகரில் வீடு மற்றும் அலுவலகமும் அருகிலேயே அமைந்துள்ளது.

நேற்றிரவு அவரது வீட்டருகே வந்த 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், வீட்டின் கதவை நீண்ட நேரம் நோட்டமிட்டு வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் பெண் ஒருவர் அதனை கவனித்து, சந்தேகப்படும்படியாக நபர் ஒருவர் வீட்டருகே உள்ளதாக தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் கீதாமுருகேசன் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Mega project to renovate Bharatiyar House: வாரணாசியில் பாரதியார் வீட்டை புதுப்பிக்க மெகா திட்டம்

ஆனால், அதற்குள் மர்ம நபர் வீட்டின் சுற்றுச்சுவர் கேட்டை திறந்து உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மர்ம நபரை எம்பி அலுவலகத்தில் இருந்து அங்கு வந்த பணியாளர்கள் பிடித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பிடிபட்ட மர்ம நபரிடம் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கனிமொழி எம்.பியின் தூத்துக்குடி அலுவலக உதவியாளரிடம் கேட்டபோது, நேற்று ஒரு நபர் உள்ளே நுழைய முன்றதாகவும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். கனிமொழி எம்பியின் வீட்டில் புகுந்த மர்ம நபரால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கனிமொழியின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The police have arrested the mysterious person who jumped over the wall at MP Kanimozhi’s house in Thoothukudi and are investigating.