Minister Ponmudi’s petition dismissed: அமைச்சர் பொன்முடி வழக்கு தள்ளுபடி

சென்னை: Court refuses to acquit Minister Ponmudi from Semman case. செம்மண் வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டுகளில் பொன்முடி அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனால் அரசிற்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளாதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களில் அமைச்சருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த ஆதாரங்கள் உள்ளது என்று தெரிவித்து அமைச்சர் பொன்முடியை வழக்கிலிருந்து விடுவிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.