Mangaluru Blast:ஆட்டோவிற்குள் மர்மப்பொருள் வெடிப்பு; 2 பேர் படுகாயம்.. மங்களூருவில் உஷார் நிலை

மங்களூரு: Suspicious Blast reported Inside an autoriksha in Mangaluru City. மங்களூருவில் ஆட்டோவில் மர்மப்பொருள் வெடித்து சிதறியதால் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், மங்களூரு நகரின் கங்கனடி டவுன் காவல் நிலைய எல்லைக்கு அருகே சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் இன்று தீடிரென வெடித்து சிதறியது. இதனால் சாலையின் நடுவே பயங்கர புகைமூட்டம் நிலவியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் காயம் அடைந்துள்ளனர்.

தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று மாநகர போலீஸ் கமிஷனர் என்.சஷிகுமார் தெரிவித்தார். மாலை 5.15 மணியளவில் ஆட்டோவில் தீ விபத்து ஏற்பட்டது.

பயணி ஒருவர் வைத்திருந்த பையில் தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது. பயணி மற்றும் ஓட்டுனர் தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தடய அறிவியல் ஆய்வகம் (எஃப்எஸ்எல்) குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்டையில் சரியான காரணங்கள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்புள்ளது. மேலம் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும், வதந்திகளுக்கு நம்ப வேண்டாம் எனவும் மாநகர போலீஸ் கமிஷனர் கூறினார்.