Kanchipuram Accident: காஞ்சிபுரம் அருகே பஸ்- வேன் நேருக்கு நேர் மோதல்: 6 பேர் காயம்

காஞ்சிபுரம்: Bus-van head-on collision near Kanchipuram: 6 injured. காஞ்சிபுரம் அருகே பஸ்- வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள கருப்பட்டிடத்தட்டை பகுதியில் காஞ்சிபுரம்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று பணிமனைக்கு சென்றுகொண்டிருந்தது. அதேபோல் ஆந்திர மாநிலம், நெல்லூரிலிருந்து 11பேரை ஏற்றிக்கொண்டு, அரக்கோணம் வழியாக காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். அப்போது பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த வேன் எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து மீது மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் சுற்றுலா வேனில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 6 பேரும் காயமடைந்ததனர். இதனைக்கண்ட அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், விரைந்து வந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மீதமுள்ள சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.