Inauguration of Govt Exhibition tomorrow in Salem: சேலத்தில் அரசுப் பொருட்காட்சி நாளை துவக்கி வைப்பு

சேலம்: Inauguration of Government Exhibition tomorrow in Salem: சேலம் அரசுப் பொருட்காட்சியை நாளை அமைசர்கள் துவக்கிவைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப்பொருட்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகியோர் நாளை (28.08.2022) தொடங்கி வைக்கின்றனர். இதனையடுத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளனர்.

தமிழக முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப்பொருட்காட்சி பல்வேறு மாவட்டங்களிளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் அரசுப்பொருட்காட்சி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நாளை (28.08.2022 ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கோன் நேரு அரசுப் பொருட்காட்சியைத் தொடங்கி வைத்து, விழாப் பேருரையாற்றவுள்ளார். செய்தித்துறை அமைச்சர் மு.பெசுவாமிநாதன் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

இவ்விழாவில் சேலம் மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சித்தலைவர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இப்பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, நகராட்சி மற்றும் குடிநிர் வழங்கல் துறை, தாரக வளர்ச்சித் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 26 அரசுத்துறை அரங்குகளும், சேலம் மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின் உள்ளிட்ட 6 அரசு சார்பு நிறுவனங்களின் என மொத்தம் 32 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி நாளை முதல் தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளது. அரசுப் பொருட்காட்சி சேலம் மட்டுமின்றி சேலத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து பார்வையிட வேண்டும். இதன் மூலம் தமிழக முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களை பற்றி அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன் பெற வாய்ப்பாக அமைந்துள்ளது.